Type Here to Get Search Results !

விவசாய போராட்டக்களத்தில் நான் 4 தலைவர்களை கொலை செய்ய வந்தோன்

 
n248293942d9746872b11a2bab3ee3dde2719245fcd4de29f920d63cd4a4781f160a87dde9 விவசாய போராட்டக்களத்தில் நான் 4 தலைவர்களை கொலை செய்ய வந்தோன்
சிங்கு போராட்டக்களத்தில் வெள்ளிக்கிழமை முகமூடியுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை விவசாயிகள் சுற்றிவளைத்தனர். அவரிடம் விசாரித்த போது, விவசாய சங்கத்தை சேர்ந்த நான்கு தலைவர்களை கொலை செய்ய வந்துள்ளதாக கூறியதாக தெரிகிறது.

பிடிபட்ட இளைஞரை செய்தியாளர்கள் மத்தியில் விவசாயிகள் பேச வைத்தனர். அப்போது, ஜனவரி 26ம் தேதி நடைபெறும் டிராக்டர் பேரணியில் போலீசார் போல் உடையணிந்து, தம்முடன் வந்தவர்கள் வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், காவல் அதிகாரி ஒருவரே தம்மிடம் இதை செய்யக் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து அந்த இளைஞரை ஹரியானா மாநிலம் சோனிபட் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த யோகேஷ் என்பது தெரியவந்தது. இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், யோகேஷ் முரண்பட்ட கருத்தை தெரிவித்தார். விவசாயிகள் தம்மை மிரட்டியதுடன் தாக்கியதாகவும், வற்புறுத்தி மது அருந்த வைத்து செய்தியாளர்கள் முன்பு பொய் பேச வைத்தனர் என்றும் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

The post விவசாய போராட்டக்களத்தில் நான் 4 தலைவர்களை கொலை செய்ய வந்தோன் appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.