நாட்டின் 72-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார்.
குடியரசுத் தலைவரின் உரை மாலை 7 மணி முதல் அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுவதுடன், அனைத்து தூர்தர்ஷன் சேனல்களில் இந்தியிலும் அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பப்படுகிறது.
தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் இந்தி மற்றும் ஆங்கில உரையைத்தொடர்ந்து தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்களில் மாநில மொழிகளிலும் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பாக உள்ளது.
இதேபோல் இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலியிலும் குடியரசுத் தலைவரின் உரை பிராந்திய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
The post குடியரசுத் தினத்தை முன்னிட்டு ராம்நாத் கோவிந்த் இன்று உரை appeared first on தமிழ் செய்தி.