பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளால் நாட்டில் விரைவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது....
எனது அன்பு வேண்டுகோளை ஏற்று தமிழகம் வந்து நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களை அறிவித்த பிரதமருக்கு நன்றி.
கொரோனா தடுப்பூசியால் இந்தியாவிற்கு உலக அளவில் பாராட்டு கிடைக்கிறது.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு போதுமான நிதி அளித்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.