தில்லி கரியப்பா மைதானத்தில் வியாழக்கிழமை (ஜன.28) நடைபெற்ற தேசிய மாணவர் படை (என்சிசி) அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இதில் பங்கேற்ற பிரதமர் மோடி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதி விபின் ராவத், முப்படை தலைமைத் தளபதிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.
The post தேசிய மாணவர் படை அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர்மோடி கலந்துகொண்டார் appeared first on தமிழ் செய்தி.