ஆப்கானிஸ்தானின் காபூலின், ஜாய் ஷெர் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
காபூலின் பி.டி-7 இல் இராணுவ வாகனம் மீது திங்களன்று குறிவைத்துத் தாக்கப்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் ஒருவரும், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர் என்று காபூல் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, இன்று இந்த வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.