இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தோற்ற இந்திய அணி 0-1 என தொடரில் பின்தங்கியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது.
2ம் நாள் ஆட்டத்தை துவங்கிய சிறிது நேரத்தில், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அக்சர் படேல் 5, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ் ஆகியோர் ரன் எடுக்காமலும், முகமது சிராஜ் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ரிஷப் பன்ட் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.