Type Here to Get Search Results !

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 14,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 15,830 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 11,13,502ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 4,640 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 77 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 13,728ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 14,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,90,919 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,08,855 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.