விளவங்கோடு சட்ட மன்ற தொகுதியில் விஜயதரணி மீண்டும் போட்டியிட காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ வாக விஜயதரணி பதவி வகித்து வரும் நிலையில் 10 ஆண்டுகளாக தொகுதியில் மக்கள் மற்றும் மக்கள் பிரச்சினைகளை சந்திக்கவோ, கட்சி பிரட்சனைகளை சந்திக்கவோ முன் வர வில்லை என்று காங்கிரசார் புகார் கூறியுள்ளனர்.
எனவே தொகுதிக்குட்பட்ட நபர்கள் 73 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளதாகவும் அவர்களில் ஒருவரை நிறுத்த தலைமை முன் வர வேண்டும், தொடர்ந்து தலைமை மீண்டும் விஜயதரணியின் பெயரை அறிவிக்கும் பட்சத்தில் விஜயதரணிக்கு எதிராக தொகுதிக்குட்பட்ட ஊராட்சி, பஞ்சாயத்து, நகராட்சி என 22 பேரை போட்டி வேட்பாளராக களம் இறங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மேல்புறம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டன.