5-ஜி சேவைக்கு தடை விதிக்க கோரி நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
5-ஜி பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காக தோன்றுகிறது என நீதிபதி குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கை தள்ளூபடி செய்த நீதிபதி ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.