“யோகா கலை நேபாளத்தில் தோன்றியது. கலை உருவாக்கப்பட்டபோது, இந்தியா ஒரு நாடு அல்ல” என்று சர்ச்சையை கிளப்பிய நமது அண்டை நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி கூறினார்.
‘ஹிந்துக் கடவுள் ராமர், நேபாளத்தில் பிறந்தவர்; ‘விசுவாமித்திரர்’, போன்ற முனிவர்களும். நேபாளத்தில் பிறந்தவர்கள்’ என, ஏற்கனவே சர்ச்சையை எழுப்பியுள்ளார். நேபாள பிரதமர் சர்மா ஒலி. இந்நிலையில், காத்மாண்டுவில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில், சர்மா ஒலி பேசியதாவது: யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல, யோகா கண்டுபிடிக்கப் பட்டபோது, இந்தியா ஒரு நாடாகவே இல்லை; பல ராஜ்ஜியங்களாக இருந்தது, நேபாளத்தில் தான் யோகா உருவானது.
நாங்கள் அதை சர்வதேச அரங்கில் சேர்க்கத் தவறிவிட்டோம். ஆனால் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அதைக் கூறி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். நம் நாட்டின் ரிஷிகள் மற்றும் யோகிகள் பற்றி உலகுக்கு சொல்லத் தவறிவிட்டோம். ராம் நேபாளத்தின் அயோத்தியில் பிறந்தார். சீதாவும் நேபாளத்தின் தேவ்காட்டில் பிறந்தார். ரிஷி வால்மீகியும் இங்கு பிறந்தார். ஆனால் இந்த வரலாறு திருத்தப்பட்டுள்ளது. அதை சரிசெய்ய வேண்டிய நேரம் இது. அவர் இப்படித்தான் பேசினார்.