Type Here to Get Search Results !

விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுமாறு மத்திய விவசாய அமைச்சர் வேண்டுகோள்…. Union Agriculture Minister urges to give up struggle against agricultural laws ….

விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுமாறு மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, 11 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த பேச்சுக்களில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
இந்த சூழலில், விவசாயிகள் ஏழு மாத கால போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இந்த புதிய விவசாய சட்டங்களுக்கு நாட்டின் பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே இதில் சில சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது. அப்படியானால், அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது. அவர்களுடன் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம், ”என்றார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.