வடகிழக்கு சீனாவின் துறைமுக நகரமான டாலியனில் திங்கள்கிழமை இயற்கை எரிவாயு குழாய் வெடித்ததில் எட்டு பேர் காயமடைந்தனர், 3 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டேலியன் ஜின்ஜோ மாவட்டத்தில் இன்று காலை 6 மணியளவில் இந்த எரிகுழாய் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எரிவாயு குழாய் வெடித்துச் சிதறியதில் ஜன்னல் கண்ணாடி உடைந்து எட்டு பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ கட்டுப்படுத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் இயற்கை எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக வெடிவிபத்து நிகழ்ந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
The post இயற்கை எரிவாயு குழாய் வெடித்ததில் 8 பேர் காயமடைந்தனர்… 3 பேர் மயக்கம்….! appeared first on தமிழ் செய்தி.