சசிகலா கடந்த 20ம் தேதி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சசிகலா உடல்நிலை தொடர்பாக விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்:- ஐசியூவில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, உணவு உட்கொள்கிறார். சசிகலாவுக்கு படிப்படியாக கொரோனா தொற்று குறைந்துள்ளது. சசிகலா எழுந்து உட்கார்ந்து, உதவியுடன் நடக்கிறார்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு 205 ஆக அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் பிரச்சனையும் படிப்படியாக குறைந்து வருகிறது. சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசிக்கும் திறன் சீராக உள்ளது. அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்.அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
The post ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் appeared first on தமிழ் செய்தி.