கரூரில் அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜிக்கு எதிராக களமிறக்கப்பட்டவர் விவி செந்தில்நாதன். அவருக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது.
அத்துடன் 2011, 2019 தேர்தல்களில் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் போட்டியிட வைக்கப்பட்டார் செந்தில்நாதன். ஆனால் தேர்தல்களில் அவர் தோற்றுப் போக, கரூரில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கை ஓங்கியது.
இதனால் அமைதிகாத்த விவி செந்தில்நாதன் இப்போது பாஜகவுக்கு தாவிவிட்டார். இத்தனைக்கும் அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது. ஆனாலும் கூட்டணி கட்சியை சேர்ந்த செந்தில்நாதனை பாஜக அரவணைத்துக் கொண்டிருக்கிறது.
The post வி.வி. செந்தில்நாதன் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவினார் appeared first on தமிழ் செய்தி.