ஜனவரி 20-ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவருடன் சிறையில் ஒரே அறையில் தங்கியிருந்த அவரது உறவினர் இளவரசிக்கும் கொரோனா பாதித்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கும் கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுளள்து. இதையடுத்து இளவரசியும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக, ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெங்களூரு, விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வி.கே. சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சோத்து தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையின் மூத்த மருத்துவா்கள் கொண்ட குழு, சசிகலாவின் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஏற்கெனவே நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, ஹைபோ தைராடிசம் பிரச்னைகள் உள்ளதால் சசிகலாவை தனியாா் மருத்துவமனைக்கு மாற்றுமாறு அவரது உறவினா்கள் விடுத்த கோரிக்கையை சிறைத் துறை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனா். அவா் இன்னும் சிறைக் கைதியாக உள்ளதால் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என சிறைத் துறை அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.
The post அதிர்ச்சி செய்தி…! இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி…! appeared first on தமிழ் செய்தி.