கர்நாடகா மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சற்றுமுன்னர் சசிகலா விடுதலை செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா ஜனவரி 27 -ம் தேதி விடுதலையாவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அபராதத் தொகையான 10 கோடியே 10 லட்ச ரூபாயை சசிகலா செலுத்தினார். இதனிடையே, அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால், சிறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டு, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்ட சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவருக்கு தற்போது கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், இருப்பினும் கொரோனாவுக்கான சிகிச்சையே அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், சசிகலா விடுதலையாவதில் எந்த சிக்கலும் இல்லை என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சசிகலா 4 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து சிறையில் விடுதலையானார். இதற்கான சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்கனவே, முடிந்துவிட்டனர். சசிகலா விடுதலையை அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சசிகலா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, விக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவிடம் விடுதலை பத்திரம் ஒப்படைப்படைக்கப்பட்டுள்ளது.
The post முக்கிய செய்தி… சற்றுமுன்னர் சசிகலா விடுதலை appeared first on தமிழ் செய்தி.