Type Here to Get Search Results !

தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, வரும் 10ம் தேதி சென்னை வருகை

 


தமிழக சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, 10ம் தேதி சென்னை வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.அவருடன், தேர்தல் கமிஷனர்கள், சுஷில் சந்திரா, ராஜிவ் குமார் ஆகியோரும் வருகின்றனர்.

அன்றைய தினம், சென்னையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில், சுனில் அரோரா பங்கேற்று, தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிவார்.பின், அடுத்த நாள், 11ம் தேதியன்று, புதுச்சேரியிலும், 12ம் தேதி கேரளாவிலும், சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை,அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.