இந்தியாவிலிருந்து 15 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவைக் கூட்டம் தொடங்கியது.
இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகையில்,
இதுவரை 22 நாடுகளிடமிருந்து கொரோனா தடுப்பூசிக்கான கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றில், ஏற்கனவே 15 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 56 லட்சம் தடுப்பூசிகள் மானிய உதவியாகவும், 1.05 கோடி தடுப்பூசிகள் ஒப்பந்த முறையிலும் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.