வரும் 17ம் தேதி சசிகலா தஞ்சாவூர் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு 10 நாட்கள் ஓய்வெடுக்க உள்ளார். 10 நாட்கள் தங்கியிருக்கும் அவரது உறவினர்கள் பலரையும் சந்திக்கிறார்.
அதேபோல், தனது கணவர் நடராஜனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
மேலும், அவரது ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கக்கூடிய அதிமுக நிர்வாகிகளை அங்கு சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.