தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இதனை வருகிற 2021 ஜூன் மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது 10 ஆவது முறையாக பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.