Type Here to Get Search Results !

தேச பக்தர்கள் யார், யார் தேச பக்தர் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும்.... ராகுல்காந்திக்கு ஜி.கிஷன் ரெட்டி பதிலடி

 


இந்திய பகுதிகளை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது யார் என்பதை ராகுல்காந்தி தனது தாத்தா நேருவிடம் தான் கேட்க வேண்டும் என்று மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

முக்கிய மலை உச்சியை சீனாவிடம் இந்தியா விட்டுக்கொடுத்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியதற்கு கிஷன் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

கைலாஷ் சிகரத்திலிருந்து இந்திய வீரர்கள் விலகிக்கொள்வது ஏன் சீனாவிடம் சரண்டைந்துவிட்டதற்கு சமம் என்று ராகுல்காந்தி கூறியிருந்தார்.

லடாக் எல்லையில் பதற்றத்தைக் குறைக்க படைகளை திரும்பப் பெற்றுக்கொள்வது சீனாவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டியிடம் செய்தியாளர்கள் கேளவி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், இந்திய பகுதிகளை சீனாவிடம் விட்டுக்கொடுத்தது யார் என்பதை ராகுல்காந்தி தனது தாத்தா நேருவிடம் தான் கேட்க வேண்டும் என்று பதிலளித்துச் சென்றார்.

தேச பக்தர்கள் யார், யார் தேச பக்தர் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.