Type Here to Get Search Results !

திறமைமிக்க இந்திய பணியாளர்கள் அமெரிக்காவுக்கு எப்போதும் வரவேற்கப்படுகிறார்கள்

 


அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்கள் பலர் தங்கள் விசா காலக்கெடுவை அதிகரித்து நிரந்தர குடியுரிமை பெற முயன்று வருகின்றனர்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல வெளிநாடுகளிலிருந்து திறமைமிக்க பணியாளர்கள் அமெரிக்காவிற்கு வந்து வேலை செய்வது அவசியமாகிறது. இதற்காக பல்வேறு துறைகளில் திறன்கொண்ட ஊழியர்களை பணியமர்த்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

தற்போது ஜனநாயகக் கட்சி அங்கு ஆட்சிசெய்து கொண்டிருப்பதால் ஆசிய நாடுகளைச் சேர்ந்த பலருக்கு அமெரிக்காவில் பணி செய்ய எச்1-பி விசா தாராளமாக வழங்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சியின் கொள்கைப்படி வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி அமெரிக்காவின் பொருளாதாரத்தை அவர்கள் வளர்க்க உதவுவதால் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்தியாவின் அமெரிக்க தூதர் ரஞ்சித் சிங் சாந்து பேட்டி அளித்தார். திறமைமிக்க இந்திய பணியாளர்கள் அமெரிக்காவுக்கு எப்போதும் வரவேற்கப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியுரிமை சேவை நிறுவனம் ஓராண்டில் அதிகபட்சமாக 65 ஆயிரம் எச்1-பி விசாக்களை அளிக்கமுடியும். மேலும் 20 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.