பார்லியின் இரு சபைகளிலும் நிறைவேறிய, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு, 2019, டிச., 12ல் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். கடந்தாண்டு, ஜன., 10ல் இது நடைமுறைக்கு வந்தது.இந்த சட்டத்தின்படி, அண்டை நாடுகளான, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு வந்த, ஹிந்து, கிறிஸ்தவர், சீக்கியர் உள்ளிட்டோருக்கு, குடியுரிமை வழங்கப்படும்.
இந்த திருத்தச் சட்டத்துக்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும்நடந்தன.இந்நிலையில், லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணையமைச்சர், நித்யானந்த் ராய், எழுத்து மூலமாக அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த சட்டத்துக்கான விதிகளை உருவாக்க, பார்லியின் இரு சபைகளின் துணைக் குழுக்கள், கால அவகாசம் அளித்துள்ளன. அதன்படி, லோக்சபா துணைக் குழு, ஏப்., 9 வரையிலும், ராஜ்யசபாவின் துணைக் குழு, ஜூலை, 9ம் தேதிவரையும் அவகாசத்தை நீட்டித்துள்ளன. இந்த சட்டத்துக்கான விதிகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு, அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.