Type Here to Get Search Results !

'போராட்டக்காரர்களுக்கு எதிராக, உலோக லத்தி.... டில்லி போலீஸ் விளக்கம்

 


மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லையில், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, வன்முறை வெடித்தது. இதில், 400க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில், டில்லி - ஹரியானா எல்லையான சிங்கூவில், போராட்டக்காரர்கள் தாக்கியதில், ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். இதையடுத்து, உலோக லத்தி மற்றும் மிகப் பெரிய தடுப்பு கவசத்துடன், போலீசார் பாதுகாப்புடன் இருக்கும் புகைப்படம் சமூக வலை தளத்தில் வெளியானது.

டில்லி போலீஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: உலோகத்திலான லத்தி பயன்படுத்த, போலீசாருக்கு எந்த அனுமதியும் தரப்படவில்லை. இது குறித்து அந்த போலீஸ் பிரிவிடம் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.