அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்தால் கவலையோ, சந்தோஷமோ இல்லை என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் முன்னதாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடா்ந்து, தொகுதிப் பங்கீடு தொடா்பாக அதிமுக, பாஜக தலைவா்கள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா். இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து தற்போது பாஜகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏப்.6-ஆம் தேதி நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் எல்.முருகன் பேசியதாவது:
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் கவலையோ, சந்தோஷமோ இல்லை. ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும் எங்களின் இலக்கு வெற்றியாகத்தான் இருக்கும். விரைவில் பாஜக சார்பில் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம் என்று முருகன் கூறினார்.