சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை என்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கான தொகுதிகள் நள்ளிரவில் இறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாமகவினரும் அதிமுக அலுவலகத்திற்கு வந்தனர்.
பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு இறுதி செய்ய வேண்டிய தொகுதிகள் குறித்து ஜி.கே. மணி உள்ளிட்ட நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு இந்த ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி பேசியதாவது, ”சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது குறித்த முறையான அறிவிப்பு காலை (புதன்கிழமை) வெளியாகும்” என்று கூறினார்.