அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு இழுபறியில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பாஜகவுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் பாஜகவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் கையெப்பமிட்டனர்.