Type Here to Get Search Results !

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கேரளா மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக 19-ம் தேதி, மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை,நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை,தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
22 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும்
20, 21-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை,மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும்” என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.