Type Here to Get Search Results !

3வது ஒருநாள் போட்டியில், இலங்கை இத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியா…..!

 

இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டியில், இலங்கை 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாக்காவில் நேற்று இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. அதன்படி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களை எடுத்தது . இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய, கேப்டன் குசால் பெரேரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சதமடித்து அதிரடி காட்டினார். அவர் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்ததாக வங்காளதேச அணி 287 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது.

ஆனால் இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வங்காளதேச அணி திணறியது. 42.3 ஓவர்களில் வங்காளதேச அணி 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில், வங்காளதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. 3 ஒருநாள் போட்டித் தொடரில் வங்காளதேச அணி2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.