இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு 27.5.1964ல் தனது 74வது வயதில் மறைந்தார்.
ஜவஹர்லால் நேருவின் 57ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நவபாரத சிற்பி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவுநாளான இன்று அவருக்கு நமது இதய அஞ்சலி செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. அதன்படி காங்கிரசார் நேருவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடிபழனிச்சாமி, ”கலப்பு பொருளாதாரம், குழந்தைகளுக்கு பால் & மதிய உணவு,விவசாயம்,நீர் மின்ஆற்றல்,அணு ஆற்றல்,கல்வி மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகியவற்றை தன் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் செயல்படுத்திய
இந்தியாவின் முதல் பிரதமர் திரு.ஜவகர்லால் நேரு அவர்களின் நினைவுநாளில் அவரது சாதனைகளை நினைவுகூர்கிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.