Type Here to Get Search Results !

எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் அதிரடி அறிக்கை வெளியீடு.. ‌!

 

கடலூர் அரசு மருத்துவமனையில் குர்னா நோயாளிக்கு ஆக்சிஜன் அகற்றியதாக எழுந்த புகார் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடலூர்‌ மாவட்டம்‌, திட்டக்குடி பேரூராட்சி, நடு வீதியில்‌ வசித்து வந்த கண்ணன்‌ முதலியார்‌ என்பவருடைய மகன்‌ திரு. ராஜா அவர்கள்‌ (வயது 49) கொரோனா பெருந்தொற்று காரணமாக மூச்சுத்‌ திணறல்‌ ஏற்பட்டு கடந்த 8 ஆம்‌ தேதி, கடலூர்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டார்‌ என்றும்‌, நேற்று காலை வரை அவருக்கு கடலூர்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சைப்‌ பிரிவில்‌ மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள்‌ என்றும்‌, நேற்று (20.5.2023) காலை சுமார்‌ 9 மணி அளவில்‌ நோயாளி காலை உணவு அருந்தும்‌ போது அங்கு வந்த பணியில்‌ இருந்த அரசு மருத்துவர்‌ மற்றும்‌ செவிலியர்கள்‌ அவருடைய வெண்டிலேட்டர்‌ மிஷின்‌ மற்றும்‌ ஆக்சிஜனை எடுத்துக்‌ கொண்டு வெளியேற முற்பட்டனர்‌ என்றும்‌, அதை தடுக்க முயன்ற
வருடைய மனைவியை (திருமதி கஸ்தூரி) தடுத்துவிட்டு, வெண்டிலேட்டர்‌ மிஷின்‌ மற்றும்‌ ஆக்சிஜனை எடுத்துச்‌ சென்று விட்டனர்‌ என்றும்‌, அவரது மனைவி புகார்‌ செய்துள்ளார்‌.

மேலும்‌, போராடிய அவருடைய மனைவியை கீழே தள்ளிவிட்டனர்‌ என்றும்‌, இதை சற்றும்‌ எதிர்பாராத அவருடைய மனைவி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விடுகிறார்‌ என்றும்‌ ஒரு காணொளி சமூக வலைதளங்களில்‌ வலம்‌ வருவதை பார்க்கும்‌ போது நெஞ்சு பதைப்பதைக்கிறது.

இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம்‌ கடலூர்‌ அரசு தலைமை மருத்துவனையில்‌ நேற்று காலையில்‌ நடந்துள்ளது. இது மிகவும்‌ கண்டிக்கத்தக்கது. இதனை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ மீது இந்திய குற்றவியல்‌ தண்டனைச்‌ சட்டப்‌ பிரிவின்‌ கீழ்‌ உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன்‌, இறந்தவர்‌ குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்‌ என தமிழக அரசினைக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌ என தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.