தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நேற்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில், 2ம் கட்ட தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நாளை மீண்டும் தொடங்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ குழுவுடன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.