Type Here to Get Search Results !

தமிழகத்தில் கொரோனாவால் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சம்

 

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று புதிதாக 36 ஆயிரத்து 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 70 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று 467 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 24 ஆயிரத்து 478 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 72 ஆயிரத்து 761 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மேலும் 5 ஆயிரத்து 913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.