ஹரியானா பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் யோகா சேர்க்கப்படும் என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் நேற்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பேசிய ஹரியானா முதல்வர் கூறினார்:
மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தும் சிறந்த கலை யோகா. மாணவர்கள் தினமும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். யோகாசன பயிற்சியை சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் மனதில் வளர்க்க வேண்டும்.
மாணவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஹரியானாவில் உள்ள பள்ளிகளின் பாடத்திட்டத்தில் யோகா சேர்க்கப்படும். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி பாடத்திட்டத்தில் யோகா சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர், உணவு மற்றும் ஆக்ஸிஜனைப் போலவே, உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா முக்கியமானது. யோகா பயிற்சி செய்ய மக்களை ஊக்குவிப்பதும், நடைமுறையை மக்களிடம் கொண்டு செல்வதும் அரசாங்கத்தின் நோக்கம். இதற்காக 1,000 கிராமங்களில் யோகா பயிற்சி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை 550 கிராமங்களில் பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள கிராமங்களில் பணிகள் நடந்து வருகின்றன. ஆயிரம் யோகா பயிற்றுநர்களும் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு மனோகர் லால் கட்டார் கூறினார்.