குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ஆனந்த் மாவட்டம் இந்திரநாஜ் கிராமம் அருகே வந்துகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஆனந்த் மாவட்டத்திற்கு வடக்கே தாராபூர்-அகமது மாவட்டத்தை இணைக்கும் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த லாரி, கார் மீது மோதியது, காரில் இருந்த குழந்தை உட்பட சம்பவ இடத்திலேயே 10 பேரும் கொல்லப்பட்டனர்.
காரில் இருந்த சடலங்களை மீட்டு அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன.