Type Here to Get Search Results !

Breaking News…. ஹெராயின் போதை பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்…. Heroin seized at Chennai airport…!

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக வந்த தகவலையடுத்து, தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது விமானத்தில் வந்த 2 ஆப்பிரிக்க பெண்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் இருவரும் பதற்றம் அடைந்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். 
இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்ததில் 8 பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மசாலா பொடிகள் தூவப்பட்டிருந்தன. பரிசோதனையில் அவை வெள்ளை நிற ஹெராயின் பவுடர் என உறுதி செய்யப்பட்டது. 9.87 கிலோ எடையில் இருந்த இந்த ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.70 கோடி. இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. 
உடனடியாக இருவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.