சென்னை முழுக்க பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் கடுமையான இடி, மின்னல் தாக்கி வருகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மாலையில் இருந்து லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மணி சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும் மழை, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.
போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தென் சென்னையிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இரவு 10 மணிக்கு அங்கு மழை தொடங்கியது. சென்னையில் இன்று இரவு முழுக்க கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.