Type Here to Get Search Results !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,158 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,158 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,05,42,841ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை ஒரு கோடியே 1,01,79715 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 16,977 குணமடைந்துள்னர்.
கொரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,11,033ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கொரோனா வைரஸால் நேற்று மட்டும் 175 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,52,093 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் உயிரிழப்பு 1.44 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.