கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே அப்போது முதல் மோதல் போக்கு நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் சாா்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனா நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டரை மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில் சிக்கிம் எல்லையில் நகுலா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சீன வீரர்கள் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்ததாகவும், இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு நாட்டு வீரர்களிடையே நடந்த இந்த மோதலில் சீன வீரர்கள் 20 பேர் வரையில் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள். தெரிவிக்கின்றன.
The post சிக்கிம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தின் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடிப்பு appeared first on தமிழ் செய்தி.