Type Here to Get Search Results !

‘டாக்டர்களின் ஆலோசனைப்படி, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை, நோயாளிகள் போட்டு கொள்ளலாம்’

தமிழக அரசு டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கொரோனா தடுப்பூசி குறித்து, மூன்று பேர் நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டது.அக்குழு பரிந்துரைப்படி, கொரோனா பணியில் உள்ள, டாக்டர்கள் அனைவரும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்.உலகளவில், தற்போது பயன்பாட்டில் உள்ள, ‘மாடர்னா, பைசர், ஆக்ஸ்போர்டு -அஸ்ட்ராசான்கே’ தடுப்பூசிகள் பாதுகாப்பானவை.
இந்தியாவில், அவசர பயன்பாட்டுக்கு வரும், ‘கோவாக்சின்’ மருந்து, மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. அதன் முடிவுகள் வந்த பின் தான், பாதுகாப்பு தன்மை, நோய் தடுக்கும் திறன் குறித்து கருத்து கூற முடியும். அதேபோல, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் போட்டுக் கொள்ளலாம்.
குழந்தைகள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுப்பவர்கள், சம்பந்தப்பட்ட சிறப்பு டாக்டர்களிடம் ஆலோசனை பெற்ற பின், தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.நிபுணத்துவம் பெற்றவர்களின் அறிக்கை அடிப்படையில், இந்த பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. பயனாளிகள், இதை கருத்தில் வைத்து சுயமாக முடிவெடுக்கவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.