தமிழக அரசின் உதவியை பெறுவதற்காக ‘1100’ என்ற சேவை மையத்தை நாளை(பிப்.12) தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
இந்த சேவை மூலம், அனைத்து துறைகளும் முதல்வர் அலுவலக உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
1100 உதவி மையத்தை தொடர்பு கொண்டு அளிக்கப்படும் புகார்களை உடனடியாக துறைகளுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.