Type Here to Get Search Results !

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு

 


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. 

வெடி விபத்தில் அச்சங்குளம் ஏழாயிரம்பண்ணை, அன்பின் நகரம் பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக 40க்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் 8 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வரும் 34 பேரில், சிவகாசி அரசு மருத்துவமனையில் 26 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.