விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது.
வெடி விபத்தில் அச்சங்குளம் ஏழாயிரம்பண்ணை, அன்பின் நகரம் பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக 40க்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் 8 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வரும் 34 பேரில், சிவகாசி அரசு மருத்துவமனையில் 26 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.