திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார், ஒன்றியக் குழுத் தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ஜெகதீசன், மாவட்டக் குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சங்கீதா சந்திரசேகர், ஜஸ்வர்யா மகாராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், போலியோ சொட்டு மருத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகம் உள்ளிட்டவை வழங்கி, செய்தியாளர்களிடம் கூறியது..
ஜெயலலிதா மீது பொய்யான ஊழல் வழக்குகளைத் தொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் தான் அவர்கள் உயிரிழந்தார்கள். இன்று அதிமுக இமயம் போல உயர்ந்து நிற்கிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது. திமுகவிற்கு இதுவே இறுதி தேர்தல் என சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
The post 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது…. சட்டப் பேரவைத் துணைத் தலைவர் appeared first on தமிழ் செய்தி.