Type Here to Get Search Results !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,110 பேருக்கு கொரோனா உறுதி

 


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,08,47,304 ஆக உயர்ந்துள்ளது.

அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்து 78 பேர் பலியான நிலையில், ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,55,158 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,05,48,521 ஆக உள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 97.25% ஆகும். தற்போது கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,43,625 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 1.32 சதவீதமாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.