மத்திய பிரதேசம், மாண்டலா மாவட்டத்தில் உள்ள லால்பூர் கிராமத்தில் 6 மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு நேற்றிரவு விரைந்த காவல்துறையினர் மவோயிஸ்டுகளை சரணடையுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதனை ஏற்க மறுத்த மாவோயிஸ்டுகள் காவல்துறையினர் மீத துப்பாக்கிச்சுடு நடத்தினர்.
இதற்கு காவலர்கள் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இருத்தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.