தமிழகத்தில் இன்று புதிதாக 469 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கொரோனா பாதிப்பு புதிதாக 469 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,42,730 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 491 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,26,011 பேர் குணமடைந்துள்ளனர், 12,391 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 4,328 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.