Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று புதிதாக 477 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி

 


தமிழகத்தில் இன்று புதிதாக 477 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள் 4 பேர், கேரளம் மற்றும் தெலங்கானாவிலிருந்து வந்தவர்கள் தலா ஒருவருக்கு கொரோனா.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8,41,326 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 503 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,24,527 பேர் குணமடைந்துள்ளனர். 12,382 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 4,417 பேர் இன்னும் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.