Type Here to Get Search Results !

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கூடுதல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.3,113 கோடி ஒதுக்கீடு

 


தமிழகத்துக்கு நிவர் புயல் பாதிப்புக்காக ரூ.63.14 கோடியும், புரெவி புயல் பாதிப்புக்காக ரூ.223.77 கோடி நிதியும் என மொத்தம் ரூ.286.91 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்புகள் பற்றியும், அதற்காக நிவாரணத் தொகை வழங்குவது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கூடுதல் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.3,113 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்துக்கு நிவர் புயல் பாதிப்புக்காக ரூ.63.14 கோடியும், புரெவி புயல் பாதிப்புக்காக ரூ.223.77 கோடி நிதியும் என மொத்தம் ரூ.286.91 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது வெள்ள பாதிப்புக்கு உள்ளான ஆந்திராவுக்கு ரூ .280.78 கோடியும், பீகாருக்கு ரூ.1,255.27 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு , மத்திய பிரதேசத்திற்கு ரூ 9.91 கோடி கிடைக்கும். காரீப் பருவத்தில் பூச்சி தாக்குதலுக்கு உள்ளான மத்திய பிரதேசத்திற்கு ரூ .1,280.18 கோடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.