Type Here to Get Search Results !

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்... பிரதமர் மோடி பிரசாரம்.... ஆதரவு திரட்ட திட்டம்...!

 


தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் வரும் மே மற்றும் ஜூன் மாதம் நிறைவுபெற உள்ளது.

இதனால் இந்த 5 மாநிலங்களிலும் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தேர்தல் தேதி அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என கூறப்படுகிறது.

மாநிலத்தில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற 3 மாநிலங்களிலும் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட உள்ளது.

இந்த மாநிலங்களிலும் தேர்தலை சந்திக்க மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.எனவே, இந்த 5 மாநிலங்களிலும் தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ஆட்சி பிடித்துவிடவேண்டும் என பாஜக காய்கர்த்தி வருகிறதாம்.

இந்நிலையில், பிரதமர் மோடியும் தேர்தல் பிரசாரம் செய்து ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார். அவர் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை வரும் 7-ம் தேதி மேற்கு வங்காளத்தில் தொடங்க உள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள ஹல்தியாவில் பா.ஜ.க சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பிரசார கூட்டத்தில் மோடி பேசுகிறார். அப்போது அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அசாம், தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் மோடி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முனைப்புடன் நடைபெற்று வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.