Type Here to Get Search Results !

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்... மாநிலங்களவையில் மார்ச் 8 வரை ஒத்திவைப்பு

 


மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கியது.அப்போது நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மத்திய ஆய்வறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. 

இந்நிலையில் மத்திய ஆய்வறிக்கை மீதான முதற்கட்ட அமர்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாநிலங்களவை மார்ச் 8ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபைத் தலைவர் அறிவித்தார். மார்ச் 8ஆம் தேதி தொடங்கும் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.